search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் விலை"

    • நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலை யில் கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலையிலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான(ஜூன்) நூல் விலை ஆனது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர். இதன்படி தொடர்ந்து 5 மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    அதன்படி ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • கடந்த நான்கு மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடை ளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச், ஏப்ரல் மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது.

    இந்நிலையில் நடப்பு (மே) மாதத்திற்கான நூல் விலை இன்று அறிவிக்கப்பட்டது. அதில் 10ம் நம்பர் மற்றும் 16ம் நம்பர் கோம்டு நூல் விலை மட்டும் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. (திருப்பூரில் இந்த வகை நூல்கள் அதிக அளவில் பயன்படுத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது) மற்ற நூல் வகைகள் அனைத்தும் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர்.

    இதன்படி கடந்த நான்கு மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    நூல் விலையானது ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நூல் விலையை அடிப்படையாகக் கொண்டு தான் உற்பத்தி செய்யும் துணிகளின் விலை முடிவாகும்.
    • புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்று வட்டாரத்தில் முக்கிய தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. இங்கு வேட்டி, சர்ட், சுடிதார், துண்டு, லுங்கி உள்பட பல்வேறு ஜவுளி வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    ஆனால் கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்வால் விற்பனை இல்லாமல், உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கமடைந்தன. இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நூல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

    நூல் விலையை அடிப்படையாகக் கொண்டு தான் உற்பத்தி செய்யும் துணிகளின் விலை முடிவாகும். கடந்த பல மாதங்களாக நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் துணி உற்பத்தி செலவு அதிகரித்துவிட்டது. கூடுதலாக விலை வைத்து துணி விற்பனை செய்தாலும் மொத்த கொள்முதல் வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கமடைந்துவிட்டன.

    ஆர்டரும் இல்லாததால் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் ஜவுளி தொழில் மிகவும் சரிவைநோக்கி சென்றது. தற்போது நூல் விலை கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் தொழில் இயல்பு நிலைக்கு வந்துள்ளது. புதிய ஆர்டர்கள் அதிக அளவு வரும் என எதிர்பார்க்கிறோம். அப்படி வரும் பட்சத்தில் மீண்டும் ஜவுளி உற்பத்தி தொழில் சூடு பிடிக்கும். இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
    • அரசின் முயற்சியால் பஞ்சு விலை குறைய தொடங்கி இருக்கிறது.

    திருப்பூர்:

    பின்னலாடை உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை இந்த மாதம் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:- இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல்:-

    நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் நூல் விலை குறைந்துள்ளது. நூற்பாலைகள் நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும். பஞ்சு விலை குறைந்து வருகிறது. அதற்கு ஏற்ப நூல் விலையையும் குறைத்து கடந்த மார்ச் மாத நூல் விலையை அறிவித்தால் பனியன் உற்பத்தியாளர்கள் புதிய ஆர்டர்களை தைரியமாக எடுத்து செய்ய முடியும். ஏற்கனவே நூல் விலை உயர்வால் ஆர்டர்களை பெற தயக்கம் காட்டியதால் திருப்பூரை தேடி வந்த ஆர்டர்கள் மாறி சென்று விட்டன. நூல் விலையை மேலும் குறைத்து நூற்பாலை உரிமையாளர்கள் திருப்பூர் பனியன் தொழில் மேம்பட ஒத்துழைக்க வேண்டும்.

    டீமா தலைவர் முத்துரத்தினம்:-

    இந்தியாவில் பருத்தி உற்பத்தி தற்போது இல்லை. புதிய பருத்தி பஞ்சு வர இன்னும் 3 மாதம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சுவரத்து இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. இருந்தபோதிலும் பஞ்சு விலை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் பதுக்கல் பஞ்சை வியாபாரிகளிடமிருந்தோ, நூற்பாலைகளில் இருந்தோ வெளியே கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன் விளைவாக வேறு வழியின்றி பதுக்கல் பஞ்சு வெளியே வர தொடங்கி இருக்கிறது. 40 லட்சம் பேல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

    அரசின் முயற்சியால் பஞ்சு விலை குறைய தொடங்கி இருக்கிறது. மேலும் நூல் விலை குறைந்தால் மட்டுமே பனியன் உற்பத்தியை தொடங்குவது என்று உற்பத்தியாளர்கள் ஒரு முடிவு எடுத்து உள்ளனர். இதன் காரணமாக நூற்பாலைகளில் 90 சதவீதம் நூல் விற்பனை சரிந்து விட்டது. இருப்பில் உள்ள நூல்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக வேறு வழி இல்லாமல் நூல் விலையை குறைக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விலை குறைவு என்பது போதாது. வானுயர நூல் விலையை உயர்த்தி விட்டு இப்போது கிலோவுக்கு ரூ.40 குறைத்தால் மட்டும் போதாது. இன்னும் நூல் விலையை குறைக்க வேண்டும். பதுக்கல் பஞ்சை வெளியே கொண்டு வந்து நூல் விலை சீராக இருக்க மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    நூல் விலை உயர்வு காரணமாக ஆயத்த ஆடைகளின் விலை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கான டீ சர்ட் பனியன் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூரில் பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் 20ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இந்நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் மகாராஷ்டிரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.56ஆயிரம் கோடி அளவுக்கு ஆடை வர்த்தகம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் மாதந்தோறும் நூல் விலை உயர்ந்து வருவது பின்னலாடை தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ நூல் ரூ. 360 முதல் ரூ.430 வரை விற்கப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ. 400 முதல் ரூ. 470 வரை உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் நூல் விலை ரூ.40 வரை உயர்த்தப்பட்டது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நூல் விலை உயர்வை கண்டித்து கடந்த 16,17-ந்தேதி திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 22-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே நூல் விலை உயர்வு காரணமாக ஆயத்த ஆடைகளின் விலை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கான டீ சர்ட் பனியன் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான டீ சர்ட் பனியன் ரூ.120ல் இருந்து ரூ.160ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான லெக்கிங்ஸ் ரூ.130ல் இருந்து 160ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் 10 எண்ணம் கொண்ட சிறியவர்களுக்கான பேக் ரூ.300ல் இருந்து ரூ.420ஆகவும், பெரியவர்களுக்கான பேக் ரூ.800ல் இருந்து ரூ.1100ஆகவும் உயர்ந்துள்ளது. பெரியவர்கள் அணியும் ஒரு பனியன் ரூ.80ல் இருந்து ரூ.110ஆக உயர்ந்துள்ளது.

    நூலால் தயாரிக்கப்பட்ட டிராக் பேண்ட் ரூ.200 முதல் ரூ.250க்கும், பஞ்சால் தயாரிக்கப்பட்டது ரூ.100 முதல் ரூ.130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆயத்த ஆடைகள் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் விற்பனை முன்பு போல் இல்லாததால் வியாபாரிகள் சற்று கவலையடைந்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் 2-ம் தர பனியன் விற்பனையாளர்கள் சங்க துணை தலைவர் எம்.ஜி.குமார் கூறியதாவது:-

    நூல் விலை உயர்வால் அனைத்து ஆயத்த ஆடைகளின் விலை 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் முன்பு போல் வாங்காமல் குறைந்த அளவே ஆயத்த ஆடைகளை வாங்குகின்றனர். 10 பனியன் வாங்குகிறவர்கள் தற்போது 2 குறைத்து 8 பனியன் வாங்குகின்றனர். விலை உயர்வே இதற்கு காரணம். ஆயத்த ஆடைகள் விலை உயர்வு காரணமாக வெளி மாநில வியாபாரிகள் திருப்பூரில் ஆடைகள் வாங்குவதை குறைத்து வருகின்றனர் என்றார்.

    திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்-ஏற்றுமதியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், நூல் உள்ளிட்ட ஆடைகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வந்த 400-க்கும் மேற்பட்ட சிறு, குறு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆடை உற்பத்திக்கான கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை இந்தியாவிலேயே தயாரித்தால் மூலப்பொருட்களின் விலை குறையும். மேலும் பஞ்சு வியாபாரிகள் ஆன்லைன் மூலம் பஞ்சுகளை வாங்கி பதுக்குகின்றனர். விலை ஏறும் போது அதனை விற்கின்றனர்.

    எனவே பஞ்சு பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் திருப்பூருக்கு கிடைக்கும் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் போட்டி நாடுகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

    கரைப்புதூா் நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் கரைப்புதூா் ராஜேந்திரன் கூறியதாவது:-

    துணி உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை விலை உயரவில்லை. 20 கவுண்ட் ரக நூல் கிலோ ரூ.160 ஆக இருந்தது. தற்போது ரூ.240 ஆக விலை உயா்ந்துள்ளது. பொருளாதாரம் பாதிப்படைந்து மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் வட மாநில ஜவுளி வியாபாரிகள் துணி கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டவில்லை.

    இதன் காரணமாக துணி விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இருப்பு வைக்கப்பட்ட துணிகளை நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலை பாதுகாக்க அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. திரும்ப பெறும் தொகைகளை உடனே வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள் தொழில் மேம்பாட்டுக்காக கடன் வாங்கி திணறி வருகின்றனா். சிலர் திவால் ஆகும் நிலையில் உள்ளனர். அவர்கள் வாங்கிய கடன்களுக்கு வட்டி சலுகை வழங்கிட வேண்டும். மேலும் தொழில்துறை வளர்ச்சி பெற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். பஞ்சு, நூல் பதுக்கலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைதரகர் இன்றி ஜவுளி உற்பத்தியாளர்கள் நேரடியாக துணிகளை விற்பனை செய்ய திருப்பூா், கோவை மாவட்டத்தின் மத்தியில் பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்றார்.

    ×